இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் - பீதியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே உலக நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அதிலும், சமீபத்தில் ஜப்பானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் சுமார் 160 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இன்று அதிகாலை இந்தோனேசியா நாட்டின் தலாவத் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.

இந்தத் தகவலை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதேபோல், பப்புவா நியூ கினியாவின் வடகடலோர பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

earthquake in indonesia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->