காலையிலேயே குலுங்கி போன சீனா - நிலநடுக்கத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலி.!
earthquake in china kansu
சீன நாட்டில் இன்று காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன நாட்டில் உள்ள கான்சு மாகாணத்தில் லின்சியா சென்குவான்சென் என்ற இடத்தில் பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்தன.
காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயரிழந்தனர். மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இன்னும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
English Summary
earthquake in china kansu