பெத்த தாயை கத்தியால் குத்தி, கொடூரமாக கொலை செய்த மகள்.! வாக்குமூலத்தில் கூறிய அதிரவைக்கும் காரணம்.! - Seithipunal
Seithipunal


தனது 53 வயது தாயை 18 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மகளுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் ஸ்டாப்பிபோர்டஷிர் நகரில் வசித்து வருபவர் சார்லெனே சர்கென்ட். 25 வயது நிறைந்த இவர் தனது 53 வயது தாயுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் கத்தி குத்தப்பட்ட நிலையில் அப்பெண்ணின் தாய் கொடூரமாக இருந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சார்லெனே தனது தாய் அவரது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு இறந்துவிட்டதாக பொய் கூறியுள்ளார்.

ஆனால், போலீசார் சந்தேகத்தின் பெயரில் சார்லெனேவிடம் விசாரித்ததில், அவர் தனது தாயை தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் அதில், எனது தாய் ஒரு பேய் போல கொடூரமாக நடந்துகொண்டார். அவர் தினமும் என்னை கொடுமைப்படுத்தினார்.

அவரது நடவடிக்கை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, மேலும் அவரது கொடுமைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியாமல் கோபத்தில் கத்தியை எடுத்து எனது தாயை 18 முறை கொடூரமாக குத்தி கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

பின்னர் போலீசார் அவரை கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter killed mother in britania


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->