தமிழக முறையில், மொய் விருந்து வைத்து கஜாபுயலுக்கு நிதி திரட்டிய அமெரிக்க வாழ்தமிழர்கள்!! நெகிழவைத்த நிகழ்வு!!
தமிழக முறையில், மொய் விருந்து வைத்து கஜாபுயலுக்கு நிதி திரட்டிய அமெரிக்க வாழ் தமிழர்கள்!! நெகிழவைத்த நிகழ்வு!!
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக கடந்த வாரம் அமெரிக்க வடக்கு கரோலினா நகரில் தமிழர்களான வாகை மகளிர் குழுவினர் மொய் விருந்து நடத்தினர். இதன் மூலம் ரூ.3½ லட்சம் வசூல் செய்தனர். இதனை, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், அனவயல், செரியலூர் உள்ளிட்ட கிராமங்களில் சோலார் தெரு விளக்குகள் பொருத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இதே போல் டாலஸ் நகரில் தமிழர்கள் இணைந்து மொய் விருந்து நடத்தி விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் வசூல் செய்தனர்.
அமெரிக்காவில் உள்ள டாலஸ் நகரில் தமிழ் மலரும் மையம், தமிழ் பள்ளிகள் சார்பில் பிரமாண்டமான மொய்விருந்து நடத்தினர். இதில் தமிழ் குடும்பங்கள் மற்றும் இந்திய குடும்பங்கள் உட்பட 700 பேர் பங்கேற்றனர்.
அவர்களுக்கு தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடப்பது போல தரையில் விரிப்புகள் போட்டு, தலை வாழை இலைகள் வைத்து அறுசுவை உணவுகளை ஏற்பாட்டாளர்களே பரிமாறினர். இந்த மொய் விருந்தின் மூலம் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் வசூலானது.
இதுகுறித்து "கஜா புயலால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தோட்டங்களில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றி மறுநடவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு கொடுத்தவர்கள் மறுவாழ்வுக்கு வழி செய்யவில்லை.
இதனால் தான் குறுகிய காலத்தில் கலாசார முறைப்படி உதவிகள் பெற தமிழகத்தில் மொய் விருந்து நடத்துவது போல அமெரிக்காவிலும் நடத்தினோம். முடிந்த அளவு அழைப்புகள் அனுப்பினோம்.
இதில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து கலந்துகொண்டு தாராளமாக மொய் செய்தார்கள். இதில் ரூ.14 லட்சத்து 32 ஆயிரம் கிடைத்துள்ளது. எங்களால் ஒரு கிராமத்தை மீட்க முடியும் என்று நம்புகிறோம்.
அதேபோல் நல்ல சம்பளத்தில் உள்ள ஒவ்வொருவரும் உதவ முன்வந்தால் விரைவில் நம் விவசாயிகளை மீட்கலாம்" என்று மொய் விருந்துக்கு ஏற்பாடு செய்த ஜெய்நடேசன், கீதா சுரேஷ், பிரவீணா வரதராஜன் ஆகியோர் கூறினர்.
English Summary
collecting fund for kaja cyclone in america