பச்சிளங்குழந்தை என்று கூட பாராமல் கன்னத்தில் பளார் என்று அறைந்த பாதிரியார்..துடிதுடித்து கதறிய குழந்தை.,வைரலாகும் வீடியோ உள்ளே.! - Seithipunal
Seithipunal


அழுது கொண்டிருந்த குழந்தையை, பாதிரியார் ஒருவர் கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிரெஞ்சு பாதிரியார் ஒருவர், தேவாலயத்தில் குழந்தை ஒன்றிற்கு ஞானஸ்தானம் கொடுக்க தயார் நிலையில் இருந்தார்.

அப்பொழுது அந்த குழந்தை சத்தமாக அழுதுகொண்டிருந்தது. உடனே அந்த பாதிரியார் அழக்கூடாது என அந்த குழந்தையை கண்டித்து, குழந்தையின் தன்மேல் சாய்த்து சமாதானப்படுத்த முயன்றார்.

church father slap baby for crying க்கான பட முடிவு

ஆனால் அந்த குழந்தை நிறுத்தாமல் மேலும் சத்தமாக அழ ஆரம்பித்தது. இதனால் கோபமடைந்த பாதிரியார் பொறுமையிழந்து, குழந்தையின் கன்னத்தில் பட்டென்று அறைகிறார்.

இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.மேலும்  குழந்தை வலி தாங்க முடியாமல் மேலும் கதறி அழ ஆரம்பிக்கிறது.

இதனை பார்த்து கோபமடைந்த குழந்தையின் தந்தை, பாதிரியாரின் கைகளில் இருந்து குழந்தையை வேகமாக பறித்துகொண்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டார் .சமூகவலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

church father slaps the baby for crying


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->