நாட்டில் உள்ள மசூதிகளில் தேசிய கொடியை பறக்க விடுங்கள்..!! இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு..!!!
நாட்டில் உள்ள மசூதிகளில் தேசிய கொடியை பறக்க விடுங்கள்..!! இஸ்லாமிய அமைப்புகள் அறிவிப்பு..!!!
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் சுமார் 2 கோடி இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் 'உய்குர்' இனத்தை சேர்ந்தவர்கள். அந்நாட்டின் 'சிங்ஜியாங்' மாகாணத்தில் அதிகமாக உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து, சீன படைகளுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் எல்லையோரம் பதுங்கியிருக்கும் இவர்கள் அவ்வப்போது சீனாவின் சிங்ஜியாங் பகுதியில் பயங்ரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சீனாவின் உள்ள பிரபல ரெயில் நிலையங்களுக்குள் புகுந்து ஏராளமான பொதுமக்களை வெட்டி சாய்த்துள்ளனர்.
இந்நிலையில், சீனாவில் வாழும், முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்ந்த அலுவலகங்களில் சீன நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என பிரதான முஸ்லிம் அமைப்பு அமைதியை நிலை நாட்ட நல்லதொரு உத்தரவை போட்டுள்ளது.
English Summary
CHINA MASQUE NATIONAL FLAG