திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.! குலுங்கிய கட்டிடம்., தெறித்தோடிய மக்கள்.!!
china earthquake peoples panic
சீனாவில் உள்ள சிசுவான் மாகாணத்தில் இருக்கும் காங்கிஜியன் கவுண்டி என்னும் நகரில் நேற்று காலை அங்குள்ள உள்ளூர் நேரப்படி சுமார் 8.48 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 15 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்டதாகவும்., ரிக்டர் அளவு கோலில் சுமார் 5.3 ஆக பதிவாகியுள்ளதாகவும் சீனாவின் நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்தது.
நிலநடுக்கம் சுமார் 10 வினாடிகள் நீடித்தாலும் பயங்கரமாக அதிர்வை ஏற்படுத்தியதன் காரணமாக பீதியடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலைகளும்., திறந்த வெளி மைதானங்களிலும் தஞ்சமடைந்தனர்.
மேலும்., நிலநடுக்கத்தில் அங்குள்ள வணிக வளாகங்கள்., வீடுகள் மற்றும் அனைத்து விதமான கட்டிடங்களும் குலங்கியதால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகினர்., காலை நேரம் என்பதால் வேலைகளுக்கு மற்றும் பள்ளிகளுக்கு சென்ற மக்களுக்கு பெரும் அச்சத்தை இந்த நிலநடுக்கானது ஏற்படுத்தியது.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அங்குள்ள டோங்கே கிராமத்தில் இருக்கும் ஏராளமான வீடுகளில் பயங்கரமான விரிசல்கள் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர். மேலும்., இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
china earthquake peoples panic