என்றும் பயத்தில் வாழும் குழந்தைகள்..,பாலியல் தொழிலுக்கு தள்ளப்படும் அவலம் ..! - Seithipunal
Seithipunal


மியான்மரில் இருந்து வெளியேறி தஞ்சம் அடைந்து முகாம்களில் வசித்துவரும் ரோஹிங்கியா குழந்தைகளை  கடத்தி விபசாரத்திற்கு விற்கும் கொடுமையால் குழந்தைகள் எந்த நேரத்திலும் அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
மியான்மரில் நடைபெற்ற ரோங்கியா இன முஸ்லீம் மக்கள் கலவரத்தில், சுமார் 70 லட்சம் பேர்க்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இருக்க இடமில்லாமல் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். அப்படித் தஞ்சம் அடைந்த முகாம்களில் வசித்துவரும் பெண்களைக் கடத்தல்காரர்கள் நெட்வொர்க் அமைத்து, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தனியார் உளவு நிறுவனம் ஒன்று அகதிகள் முகாமுக்கு சென்று திரட்டிய தகவல்கள் திடுக்கிட வைப்பதாக உள்ளது.

பெற்றோர்களை இழந்த 10 முதல் 15 வயது சிறுமிகள் பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து செல்லும் உள்ளூர் மக்கள் சிலர், அந்த சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளி, லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாக திடுக்கிடும் தகவலை அந்த உளவு நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் இந்த அவலத்தை ஆங்கில ஊடகம் ஒன்று களத்துக்குச் சென்று நேரடியாகப் பதிவு செய்து, இதுபோன்ற பாலியல் கடத்தல்காரர்களை கண்டுபிடித்து போலீசாரிடமும் ஒப்படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Children living in fear .,to be forced into sex work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->