மண்பானைக்குள் சிக்கி துடிதுடித்த குழந்தை!! வெளியே எடுக்க முடியாமல் வெகுநேரம் அவதிப்பட்ட தாய் செய்த செயல்! வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் கவனமாக கையாளக்கூடிய கலைகளில் ஒன்றாகும். மேலும் பெற்றோர்கள் வளர்ப்பின் படியே ஒரு குழந்தை சிறந்த மனிதனாக இந்த சமூகத்தில் பிரதிபலிக்க முடியும்.

குழந்தைகளை பராமரிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. நாம் எவ்வளவுதான் கவனமாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டாலும், அவை எந்த நேரத்தில் என்ன சேட்டை செய்யும் என்பது யாருக்கும் தெரியாது. 

அவ்வாறு குழந்தை செய்யும் சேட்டையால் சில சமயங்களில் பெரும் விபரீதமே ஏற்படலாம். எனவே ஒவ்வொரு பெற்றோர்களும் எந்நேரமும்  குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மண் பானைக்குள் குழந்தை ஒன்று மாட்டிக்கொண்டு, வெளியே வர முடியாமல் துடிதுடித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பச்சிளங்குழந்தை ஒன்று  இடுப்பளவில்,மண்ணால் செய்யப்பட்ட  பானைக்குள் மாட்டிக்கொண்டுள்ளது . அதனை கண்டு பதற்றம் அடைந்த தாய் அதனை வெளியே எடுக்க மிகவும் போராடுகிறார். மேலும் பானையை உடைக்க முயற்சி செய்தாலும் குழந்தைக்கு ஏதேனும்  ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று பயந்து அவ்வாறும் செய்யவில்லை.

 பின்னர் அங்கிருந்து சிறுவன் ஒருவரின் உதவியுடன் மிகவும் பொறுமையாக குழந்தையை அசைத்து அசைத்து மண் பானையில் இருந்து வெளியே மீட்டனர். இதில் அக்குழந்தை வலி தாங்கமுடியாமல் துடிதுடித்த காட்சி மிகவும் வேதனையைக் கொடுப்பதாக இருந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child struggled inside pot


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->