8 மாத குழந்தையை துப்பாக்கியால் சுட்ட சகோதரன்!. பதறிப்போன பெற்றோர்! - Seithipunal
Seithipunal


   

மெக்ஸிகோ நாட்டில், டைரெல் பிட்ஸ்லி என்ற நபரும் அவரின் மனைவி ஷைனே நெல்சன் என்பவரும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் ஹோட்டலில் தங்கியுள்ளனர். ஹோட்டல் அறையில் கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய சிறுவன் திடீரென்று அவனது சகோதரியான 8 மாதம் நிரம்பிய குழந்தை மீது சுட்டுள்ளான்.

அவன் சுடும்பொழுது சிறுவனின் பெற்றோர் பக்கத்துக்கு அறையில் இருந்துள்ளனர். இதனையடுத்து பிள்ளைகளை கவனிக்காத பெற்றோருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

18 வயதான தாயார் ஷைனே நெல்சன் மற்றும் 21 வயதான தந்தை பிட்ஸ்லி ஆகியோர் கூறுகையில், துப்பாக்கி தங்களிடம் இல்லை எனவும், அந்த அறையில் அது எவ்வாறு வந்தது என்பதும்  தங்களுக்கு தெரியாது என கூறியுள்ளனர்.

                   

மேலும் ஹோட்டல் அறையில் தங்களுக்கு முன்பு தங்கியவர்கள் துப்பாக்கியை விட்டுச்சென்றிருக்கலாம்  என நெல்சன் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பவத்திற்கு பிறகு பிட்ஸ்லி துப்பாக்கியை பார்த்ததாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

துப்பாக்கி குண்டு பாய்ந்த குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brother gun shot on his sister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->