அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ராமர் பாலம் குறித்து வெளியிட்ட சர்ச்சை தகவல்! வெளியிட்ட ஆதாரங்கள்!!
An american channel tweet about ramar palam
இந்தியாவின் பாரம்பரியமாக புராணமாக கருதப்படும் இராமாயணத்தில், வரும் கதையில், சீதையினை இராவணன் சிறைபிடித்து சென்றதாகவும், சீதையை மீட்க ராமன் இலங்கைக்கு சென்றதாகவும், கதை அமைக்கப்பட்டிருக்கும்.
அப்பொழுது, கடலை கடந்து செல்ல தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஓர் பாலம் அமைத்து அதன் மூலம் தனது படைகளை கொண்டு சீதையை மீட்க இலங்கை சென்றதாக கூறப்படுகிறது.
மேலும், பலர் அந்த பாலத்தின் சுவடுகள் இன்றும் இருக்கிறது என்றும், சாட்டிலைட் கொண்டு நவீன கேமராவை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கப்பட்டதாகவும், அதில் ராமர் பாலம் தெளிவாக காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக்காவை சார்ந்த ஒரு அறிவியல் தொலைக்காட்சி அதன் ட்வீட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ராமர் பாலம் இருந்தது உண்மை தான் என்றும், அங்கு மணல் மற்றும், 7000 ஆண்டுகள் பழைமையான கற்கள் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
An american channel tweet about ramar palam