பெண்களுக்கு அனுமதி மறுப்பு.! தலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்வை புறக்கணித்த மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை அமைத்தபின், பெண்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றி வருகிறது. இந்நிலையில் தனியார் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் பெண்கள் பல்கலைக்கழகங்களின் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் மிகுந்த வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும் வீடு திரும்பினர். மேலும் எந்தவித முன் அறிவிப்புமின்றி, தெளிவான காரணம் எதுவும் தெரிவிக்கப்படாமல் தடை அறிவித்து, உடனடியாக அமல்படுத்தியுள்ளதால் நாடு முழுவதும் எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பெண்களின் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் தேர்வு அறையிலிருந்தும், பெண்களை தலிபான் அரசு கல்வி கற்க வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து தலிபான்களில் பெண்கல்வி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் ராஜினாமா செய்தனர். தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் தேர்வு அறைகளிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் வரிசையாக கல்லூரியில் இருந்து வெளியே காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Afghanistan Students boycott exam as girls not allowed in universities


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->