தினமும் தொடர்ந்து 20 மணிநேரம்.! வீட்டு வேலை என்று கூறி அழைத்து சென்று பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.!! இறுதியில் நேர்ந்த சோகம்.!!
a girl miss used by London lady
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருக்கிறார் கானாவில் பிறந்தவர் ஆமி. இவருடைய பெற்றோர்கள் இருவரும் இவரின் 18 வயதில் மரணமடைந்த நிலையில்., வாழ வழியில்லாமல் பிழைக்க தெரியாமல் இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் இவரை கண்ட இலண்டனை சார்ந்த மேரி என்ற பெண்மணி., அவரை வீட்டு வேலைக்காக லண்டனுக்கு அழைத்து வந்தார். அவருக்கு தேவையான சக உதவிகள் செய்வதாக கூறியுள்ளார்.
இவரை நபியை ஆமி கடந்த 2013 ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்துள்ளார். சில நாட்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்திவிட்டு., கொத்தடிமையாக மாற்றம் செய்து பணியாற்ற வைத்து கொடுமைப்படுத்துள்ளார்.
சகல வசதிகளையும் செய்து கொடுப்பதாக கூறி இரவு படுக்கை அறையில் போர்வைகள் கூட இல்லாமல்., தரையில் படுத்து உறங்க கூறியுள்ளார். ஒரு வேளை மட்டுமே உணவு., சில நாட்கள் அதையும் வழங்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து அங்கு உள்ள நபர்களுக்கு அவரை பாலியல் தொழிலில் உட்படுத்தி., பாலியல் தொழிலுக்கு வரும் நபர்களிடம் பேச கூடாது என்பதற்க்காக வாயில் டேப் போட்டு அப்படியே அவரை அனுப்பி உள்ளார்.
சுமார் 18 மாதங்கள் இந்த கொடுமையை அனுபவித்த நிலையில் அங்கிருந்து எப்படியோ தப்பி ஓடி தெருவில் இருந்தார்., லண்டனில் ஒரு நாள் காரில் செல்லும்போது ஆமியை கண்ட மேரி., காவல்துறையினருக்கு தொடர்புகொண்டு குடியுரிமை இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்த பின்னர் மேரி குறித்த தகவலை கூறியுள்ளார்., இதனை அறிந்த ஒரு தொண்டு நிறுவனம் அவரை காப்பாற்றி வாழ்வளித்தது. பிரித்தானிய நாட்டில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும்., சுமார் 7 ஆயிரம் பேர்கள் இருந்த கொடுமைகளிலிருந்து தப்பித்து உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
English Summary
a girl miss used by London lady