வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து - 25 பேர் உடல் கருகி பலி.!
25 peoples died in china for fire accident
சீன நாட்டின் ஜியாங்சி மாகாணம் யுஷூயி மாவட்டத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இன்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தின் அடித்தளத்தில், பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
இதைப்பார்த்த ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்திருந்த பொதுமக்கள் அவசரம் அவசரமாக வணிக வளாகத்தை விட்டு வெளியேறினர். சிலர் தீப்பற்றிய பகுதிகளில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் என்று சுமார் 100க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
25 peoples died in china for fire accident