நாட்டுக்காக 20 நாட்கள்.. ஒரு நொடி கூட தூங்காமல் இருந்த ராணுவ வீரர்!
நாட்டுக்காக 20 நாட்கள்.. ஒரு நொடி கூட தூங்காமல் இருந்த ராணுவ வீரர்!
சவுதி அரேபியாவில் 70 வயது முதியவர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடக்கத்தில் அவர் சவுதி அரேபியா ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார்.
அப்போது தொடர்ந்து 20 நாட்கள் தூங்காமல் கண்விழித்து இருந்தார். பணி முடிந்ததும் ஆஸ்பத்திரிக்கு சென்று அதற்கான சிகிச்சை பெற்றுள்ளார். இருந்தும் அவருக்கு தூக்கம் வரவில்லை. எனவே 4 நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதித்தனர்.
இருந்தும் அவரால் ஒரு நொடி கூட தூங்க முடியவில்லை. தூங்குவதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் அவரால் தூங்கமுடியவில்லை.
இதனால் ஆச்சரியம் அடைந்த டாக்டர்கள் குழு அதற்கான காரணத்தை ஆய்வு செய்தனர். சரியான காரணம் தெரியாவிட்டாலும் அவரின் மனஅழுத்தமே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறினார்.
இதற்கிடையே அல்பகா பகுதி நிர்வாகி இவரது நிலை குறித்து அறிந்து அவரிடம் விசாரித்தனர். மேலும் அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளனர். மேலும் அவரது எஞ்சிய காலம் முழுவதும் அவரது அனைத்து தேவைகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளனர்.
English Summary
20 days without sleep in soldier