ப்ளீஸ்.. இதை மட்டும் செய்யுங்க.! கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு கோரிக்கை வைத்து சிறுமி எழுதிய உருக்கமான கடிதம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவை சேர்ந்தவர் ஜடோரா மாத்தியாஸ்.10 வயது நிறைந்த அந்த சிறுமி, கிறிஸ்துமஸ் தாத்தா சாண்டாவிற்கு விற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடித்ததில், எனக்கு கிறிஸ்துமஸ் தினத்திற்காக மிக சிறிய விஷயங்கள்தான் வேண்டும். எனக்கு இந்த வருடம் எல்லாமே இருக்கிறது.நீ எனக்கு கொண்டு வரும் எல்லாவற்றையும் விட ஒன்று மட்டும் தற்போது  உண்மையாக வேண்டும் என்ற ஆசை உள்ளது.
அதை நீயும், என்னுடைய தந்தையின் முதலாளியும் மட்டுமே நிறைவேற்ற முடியும்.

இது என்னுடைய சிறப்பான   வேண்டுகோள் , என்னுடைய தந்தையின் வேலை நேரத்தை நீங்கள் மாற்ற வேண்டும். என்னுடைய தந்தையின் வேலைநேரம் மாலை 4.30 மணியிலிருந்து 1 மணியாக இருக்கிறது. அதனை 6.30 மணியிலிருந்து 3 மணியாக மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றினால் என்னுடைய தந்தை மிகவும் மகிழ்ச்சி அடையார். அவர் மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன், உன்னால் அந்த வேலை நேரத்தை மட்டும் மாற்றமுடியுமா? என எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை சிறுமியின் பாட்டி அமெரிக்காவில் உள்ள பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இந்த கடிதம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 year baby write letter for santa clause


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->