சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய செய்தி! தமிழகத்தில் நடக்கவிருக்கும் வானிலை மாற்றங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இந்த வருடத்தில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் தொடங்கி, வழக்கத்தை விட அதிகமான அளவிற்கு பருவமழை பெய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்து, அறிவிப்புகள் வெளியான நிலையில், வங்கக்கடலில் உருவான கஜா புயலின் காரணமாக 12 மாவட்டங்கள் சிதைந்தது. 

இன்றோடு வடகிழக்கு பருவமழையானது நிறைவுபெற்ற நிலையில்., தமிழகத்தில் வழக்கத்தை விட 24 விழுக்காடு குறைவான மழையும், சென்னையில் 50 விழுக்காடு அளவிற்கு குறைவான மழையும் பெய்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் அதிகப்படியான பனியானது பெய்து வருகிறது. 

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் உறை பனி நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில், அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Weather Report


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->