சென்னையில் திடீரென பெய்த மழை!. சென்னை மக்கள் மகிழ்ச்சி!.
suddenly rain in chennai
வடகிழக்கு பருவமழை சீசன் இன்னும், இரு நாட்களில் முடிவுக்கு வர உள்ளது. ஆனால் தமிழகத்தில் கோடைகாலத்தில் பெய்யும் கோடை மழை கூட பெய்யவில்லை. தமிழகத்தில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில், பருவமழை காலம் என்பதால் அதிக அளவில் மழை பெய்யும்.
ஆனால் இந்த பருவமழை காலங்களில் வழக்கமாக பெய்யும் மழையை காட்டிலும், மிக குறைவான மழையே பெய்துள்ளது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சென்னையில் வெயில் அதிகமாக இருந்தது. சென்னையில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று அதிகாலையிலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென காலை 11 மணி அளவில் மழை பெய்து சென்னை மக்களை குளிரவைத்துள்ளது.
சென்னையில், மேடவாக்கம், பள்ளிக்கரணை, தாம்பரம், கிண்டி, வேளச்சேரி போன்ற பகுதிகளில் லேசாக மழை பெய்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.