சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட குளிர்ச்சியான செய்தி!
march 16 weather report
கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மழை, பணி என்று தமிழகம் குளுமையாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் வட்டி வதக்கி வருகிறது.
கோடை வெயில் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதங்கள் உள்ள நிலையில், தற்போது 40 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக தமிழகத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக, வேலூர், மதுரை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தியில், அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.