வாட்சப்பில் வரும் செய்தி, உண்மையா?? பொய்யா?? என எப்படி கண்டறிவது?
Whats app update
தற்போதைய வாழ்கை முறையில் படித்தவர் முதல், படிக்காதவர் வரை அனைவரும் அதிகபடியாக பயன்படுத்த கூடிய செயலி என்றால் அது வாட்சப் தான். உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
வாட்சப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. எந்த மூலையில் எந்த விஷயம் நடந்தாலும் அதனை அணைத்து மக்களிடையேயும் கொண்டு சேர்க்கின்றது வாட்சப் செயலி. வாட்சப் செயலியில் பொய்யான செய்திகளும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் வாட்சப்பில் வந்த செய்தி உண்மையா? பொய்யா? என எப்படி அறிவது என்பதை கண்டுபிடிக்க இதுவரை ஆப்சன் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது வாட்ஸப்பில் வரும் செய்தியின் உண்மை நிலையை கண்டறியும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வருகின்ற மக்களவை தேர்தலையடுத்து வாட்சப்பில் ஏராளமான பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, வாட்சப்பில் வரும் பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
இதனையடுத்து, வாட்ஸப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான ஒரு செய்தி உண்மையா என்று அறிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘செக்பாயிண்ட் டிப்லைன்’ தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை 9643000888 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்பப்பட்ட செய்தி உண்மையா? பொய்யானதா? என்று சரிபார்க்கும் மையம், அச்செய்தியை சரிபார்த்து, அந்த செய்தியின் நிலவரத்தை என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும். வாட்சப்பில் அனுப்பப்படும் படங்கள், வீடியோ லிங்க், எழுத்து வடிவம் என பலவகையான செய்திகளை இந்த மையம் ஆய்வு செய்து உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு அந்த செய்தி சர்சைக்குரியதா, உண்மையானதா என தெரிவிக்கப்படும் என கூறியுள்ளது. இதன்மூலம் வாட்சப்பில் பொய்யான செய்தியை பகிர்வதை தவிர்க்க முடியும்.