புரட்சியை உருவாக்கிய ஜியோ நிறுவனம்!. பொதுமக்கள் மகிழ்ச்சி!.
Jio offer
மற்ற நெட்வொர்க்களை விட அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்க ஜியோ நிறுவனம் புதிய சலுகையை அறிமுகம் படுத்தியுள்ளது. 399 ரூபாய் ரீசார்ஜ் செய்தால், முழுமையான கேஷ்பேக் வழங்கும் ஜியோ புத்தாண்டு ஆஃபர் என்ற பெயரில் புத்தாண்டு சலுகையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அளித்தது.
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ வந்தபிறகு இந்தியாவில் முதல் முறையாக 4ஜி சேவை வந்தது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் அதிரடியாக இணைந்தனர். இதனால் சில நிறுவனங்கள் காணாமல் போனது.
ஜியோ நிறுவனம் குறைந்த காலத்திலேயே அதிக வாடிக்கையாளர்களை பிடித்து புதிய சாதனை பிடித்தது. இதற்கிடையில் சர்வதேச வோல்ட்-இ ரோமிங் என்ற அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்தது.
இதனால் பிற நிறுவனங்களும் புதிய சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களை தக்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஜியோ நிறுவனம் வந்த பிறகு மக்களுக்கு இணையவசதி மிகவும் எளிதில் கிடைக்கின்றது.