வாயில் நுரை தள்ளிய தங்கை.. பதறியடித்து ஓடி வந்த அண்ணன் : திருமணமான சில மாதத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்.!
Youth-Mystery-death-police-investigation
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள பாண்டியாபுரம், புதூரை சேர்ந்தவர் கனிராஜா. இவரது தங்கை பானுமதி.
இவருக்கும் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளசூரங்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.
முத்துக்குமார் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமணத்திற்கு பின் பானுமதியும், முத்துக்குமாரும் 5 நாள் மட்டுமே ஒன்றாக வசித்துள்ளனர்.
அதன்பிறகு முத்துக்குமார் பெங்களூர் சென்று விட்டார். அவ்வப்போது மனைவியை சந்திக்க வருவார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துக்குமார் வீட்டில் இருந்து கனிராஜுக்கு போன் வந்தது.
போனில்பேசிய முத்துக்குமாரின் உறவினர்கள் உனது தங்கை பானுமதி வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடக்கிறார் என கூறியுள்ளனர்.
இதையடுத்து கனிராஜ் பதறியடித்து சூரங்குடி வந்தபோது, பானுமதிசங்கரன்கோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அங்கு பானுமதி இறந்த நிலையில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கனிராஜ் சங்கரன்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தனது தங்கை சாவில் மர்மம் இருப்பதாகவும், இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கனிராஜ் போலீசாரிடம் கோரியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Youth-Mystery-death-police-investigation