தமிழகத்தில் பல கிராமங்கள் அழியும் நிலை!! அதற்கு எதிராக இளைஞர்கள் எடுத்த ஆயுதம்!.
youngsters will save villages
புதுக்கோட்டை மாவட்டம் அதிக விவசாய நிலங்கள் உள்ள பகுதி ஆகும். புதுக்கோட்டையில் ஆற்றுப்பாசனம் கிடையாது. நிலத்தடி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள கிராமங்களில் 350 அடி வரை ஆழ்துளை கிணறுகள் தோண்டி விவசாயம் செய்துவந்தனர். தற்போது அங்கு நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்ட காரணத்தால் அப்பகுதி விவசாய மக்கள் விவசாய நிலங்களை தரிசு நிலமாகவும், தைல மரம் போன்றவற்றை நட்டுவிட்டனர்.
இந்த விவசயிகளின் இயலாமையை பயன்படுத்தி கொண்டு அதிகம் பணம் வைத்திருக்கும் சில மனிதர்கள் நிலத்தை குத்தகை என்ற பெயரில் எடுத்து 1000 அடிக்கு மேல் ஆழ்துளை கிணறுகள் அமைத்து சில தொழில் நிறுவனங்களை ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அந்த தொழில் அப்பகுதி மக்களை அழிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. ஆம் அந்த கிராமத்தில் அதிக அளவு தேங்காய் மட்டை பேக்டரி ஆரம்பித்துவிட்டார்கள்.
கிராம விவசாயிகளின் வியர்வையை உறிஞ்சி தேங்காய் மட்டையில் உள்ள நார்களை அயல்நாட்டிற்க்கு ஏற்றுமதி செய்கின்றனர்.இதனால் முற்றிலும் பாதிக்கப்பட்ட கிராமமாய் ஆலங்குடியின் அருகிலுள்ள பாப்பான்விடுதி கிராமம் மாறிவிட்டது. இச்சம்பவத்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. அவ்வாறு தொழில் செய்பவர்கள் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படும் விவசாயத்தை செய்தல் கூட அப்பகுதி மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கில் அயல்நாட்டிற்கு ஏற்றுமதி செய்து தமிழகத்தின் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிக்க நினைக்கின்றனர்.
பாப்பன்விடுதியில் மக்கள் தற்போது குடிதண்ணீருக்கே அல்லாடி வருகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் அந்த கிராமம் மட்டும் அல்லாமல் அதனை சுற்றியுள்ள கிராமங்களும் அழிய நேரிடும். இதனால் அந்த ஊர் இளைஞர்கள் வேதனைப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவும், கிராமத்தை மீட்பதற்காக போராட்டத்தில் குதிக்கவும் தயாராக உள்ளனர் அந்த ஊர் மாணவர்களும் இளைஞர்களும் .
English Summary
youngsters will save villages