வாய் பேசாத சிறுமியை சீரழித்து கொன்றவனை, ஒரே நாளில் கண்டுபிடித்த போலீஸ்!
வாய் பேசாத சிறுமியை சீரழித்து கொன்றவனை, ஒரே நாளில் கண்டுபிடித்த போலீஸ்!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் அருகே உள்ள கீழச்சிவல்பட்டி – அச்சரம்பட்டியைச் சேர்ந்த சிறுமி அனுஷியா, நேற்று முன் தினம், பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப் பட்டிருந்தார்.
இதனால், போலீசார், மோப்ப நாய் கொண்டு, குற்றவாளியைத் தேடினா். அது அந்த ஊரையே சுற்றிச் சுற்றி வந்தது. அதனால், குற்றவாளி அந்த ஊரைச் சார்ந்தவனாகத் தான் இருக்க முடியும், என்று நேற்று ஊரில் உள்ள அனைவரிடமும் விசாரித்து, சல்லடை போட்டு குற்றவாளியைத் தேடினர்.
அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் (வயது 27) என்ற பெயிண்டர் தான், இந்த பாதக செயலைச்செய்தான் என்பதைக் கண்டு பிடித்த போலீசார், நேற்று அவனைக் கைது செய்தனர். அவனிடம் விசாரணை செய்த போது, அவன் கூறிய தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தது.
சிறுமி கொலை செய்யப்பட்ட அன்று காலை 11 மணிக்கு, வீட்டில் தனியாக இருந்த, அனுஷியாவை மாணிக்கம் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். இதனைத் தடுக்க, சிறுமி வாய் பேச முடியா விட்டாலும், பயங்கரமாகக் கூச்சல் போட்டுள்ளாள். அதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த மாணிக்கம், அருகில் இருந்த கம்பியை எடுத்து, அந்த சிறுமியின் தலையில் பலமாகத் தாக்கி உள்ளான்.
அதனால், ரத்த வெள்ளத்தில் அந்த சிறுமி மயங்கி விழுந்தாள். அப்படியும் விடாத அந்த காமுகன், அந்த சிறுமியை துாக்கிக் கொண்டு, தோட்டத்து பகுதிக்குள் சென்று, குற்றுயிராக இருந்தவளை பலாத்காரம் செய்துள்ளான். அதனால் தான், அந்த சிறுமி, பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட போது, மேலாடை இன்றி இருந்துள்ளார்.
போலீசார் மாணிக்கத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவனைப் போன்றவர்களை சமூகத்தில் நடமாட விடக்கூடாது, என்று அந்த கிராம மக்கள் ஆவேசமாக கூச்சல் போட்டனர்.
English Summary
young man killed speechless child and raped in sivagangai