அண்ணியின் தங்கை மீது ஏற்பட்ட காதல்! வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நடந்த விபரீதம்!! - Seithipunal
Seithipunal



தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, பட்டுவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் அமிர்தலிங்கம் என்பவரின் மகள் அகிலா. இவர் சென்னையில் உள்ள தனியார் லேப்பில் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்துள்ளார்.

அகிலாவிற்கும் அவரது அக்கா கணவரின் தம்பி சந்தோஷிற்கும் நீண்ட நாட்களாக பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சந்தோஷ் அவரது அண்ணனுடன் சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்துள்ளார். சந்தோஷின் அண்ணன் அண்ணி இருவரும் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில், தனியாக பேச வேண்டும் என்று அகிலாவை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார் சந்தோஷ்.

வீட்டில் தூங்கிய அகிலா காலையில் எழுந்திருக்காததால், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் சந்தோஷ். அங்கு அகிலாவை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் 4 மணி நேரத்திற்கு முன்னரே அகிலா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தோஷ், அகிலாவின் உறவினர்களுக்கு போன் செய்து, அகிலாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், மாடியில் உள்ள கிரில்கேட்டில் இடித்துக் கொண்டதால், அகிலாவின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது என்றும் காலையில் அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அகிலாவின் உறவினர்கள் , சந்தோஷ் தான் அகிலாவை கொலை எதோ செய்திருக்கிறார் என தெரிவித்தனர். இதனையடுத்து அகிலாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கையில், அகிலா கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து பொலிசார் சந்தோஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அகிலாவை காதலித்து வந்ததாகவும், அவர் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்து, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ததாகவும் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் சந்தோஷை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man killed his relative girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->