நீண்டநேரமாக திறக்காத கதவு! சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தவருக்கு, இரத்த வெள்ளத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி!
young girl murdered for jewels
மதுரையை சேர்ந்தவர் முருகன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் 22 வயது நிறைந்த கவுசல்யா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கௌசல்யா தனது வீட்டுடன் ஒட்டியே பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று கௌசல்யாவின் கணவன் முருகன் பணிக்கு சென்ற நிலையில் அவர் தனது ஊரில் நடைபெற்ற திருவிழாவில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.
பின்னர் கோவிலில் இருந்து திரும்பிய அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காத நிலையில் கடைக்கு வந்த சிலர் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்துள்ளனர். அப்பொழுது அங்கு கௌசல்யா அசைவற்று கிடந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவலளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது கௌசல்யா கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
மேலும் அவரது கழுத்து மற்றும் காதில் அணிந்திருந்த நகைகள் ஒன்றும் இல்லை. இதனைத் தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
பின்னர் இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக கௌசல்யா நகைகளை அணிந்து சென்றுள்ளார் இதனை பார்த்த நபர்கள் சிலர் கௌசல்யா தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு,வீட்டிற்கு வந்து கொலை செய்துவிட்டு நகையை திருடிச் சென்றுள்ளனர் என சந்தேகத்துடன் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young girl murdered for jewels