தாய் வாங்கிய கடனுக்காக 4 வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த கொடூரன்!. அதிர வைக்கும் சம்பவம்!
young boy murder
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியாபுரம் பகுதியில் வசிப்பவர் கெபின்ராஜ். இவரது மனைவி சரண்யா ஆவார். இந்த தம்பதிக்கு 4 வயதில் ரெய்னா என்ற மகன் இருந்துள்ளான்.
இந்நிலையில் கெபின்ராஜின் மனைவி சரண்யா அதே பகுதியில் உள்ள அந்தோணி என்பவரிடம் ரூ. 58 ஆயிரம் கடன் வாங்கியிருந்துள்ளார். வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு அந்தோணி பலமுறை கேட்டும் அதை சரண்யா கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டிற்கு வெளியில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்த சரண்யாவின் மகன் ரெய்னாவை துக்கிச்சென்றுள்ளார் அந்தோணி சாமி. எதோ பாசத்தில் தூக்கி செல்கிறார் என நினைத்திருந்தார் சிறுவனின் தாயார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் மகனைக் காணவில்லை என்பதால் காவல்துறையிடன் புகார் அளித்துள்ளார் சரண்யா. அவர்கள் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் அந்தோணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்தோணி முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனையடுத்து கிடுக்குபிடி விசாரணையில், சிறுவனை அழைத்துக்கொண்டு தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்கு சென்றேன். அங்குள்ள பம்பு செட் கிணற்றில் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சிறுவனை கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார் அந்தோணி.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுள்ளனர். முகிலன் குடியிருப்பு அருகில் தென்னந்தோப்பில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் ரெய்னா சடலமாகக் கிடந்துள்ளான்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கு காரணமான அந்தோணியை போலீசார் கைது செய்தனர்.