பெண் தர மறுத்ததால்.. அந்தக் குடும்பத்தையே கொலை செய்து.. தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!!
பெண் தர மறுத்ததால்.. அந்தக் குடும்பத்தையே கொலை செய்து.. தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..!!
திருவண்ணாமலை மாவட்டம், படவேடுவை அடுத்த காளிகாபுரம் கொண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன் (வயது 55) விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சாமுண்டீஸ்வரி (வயது 45). இவர்களுக்கு, நிர்மலா (வயது 24) என்ற பெண் உள்ளார்.
நிர்மலா, திருவண்ணாமலை, அரசு கலைக் கல்லுாரி விடுதியில் தங்கி எம்.ஏ. படித்து வருகிறார். காளிகாபுரம் கொண்டம் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (வயது 30) லாரி டிரைவராக இருக்கிறார்.
இவர், நிர்மலாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். முறைப்படி, பெற்றோருடன், நிர்மலாவின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டார். பெண் படித்து முடிக்கட்டும், என்று கூறி உள்ளனர், நிர்மலாவின் பெற்றோர்.
இதற்கிடையே, நிர்மலாவின் படிப்பிற்கு, நிறைய பண உதவி செய்துள்ளார் அன்பழகன். திடீரென ஒரு நாள், நிர்மலாவின் பெற்றோர், அன்பழகனிடம், அவருக்கு தங்கள் பெண்ணைக் கொடுக்க விருப்பம் இல்லை என்று சொல்லி உள்ளனர். இதனால், இரண்டு வீட்டாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக, விடுமுறையில், ஊருக்கு வந்தார், நிர்மலா. அப்போது, அன்பழகன் நள்ளிரவில், நிர்மலாவின் வீட்டிற்குச் சென்றார். வாசலில் படுத்துக் கிடந்த, நிர்மலாவின் தந்தை சிவராமனை, அரிவாளால் வெட்டினார்.
பின், வீட்டிற்குள் சென்று, நிர்மலாவையும், அவரது தாய் சாமுண்டீஸ்வரியையும் சராமரியாக அரிவாளால் வெட்டினார். இதி்ல், தாயும் மகளும், சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
அக்கம் பக்கத்தினர், சத்தம் கேட்டு ஓடி வந்தனர். வெளியே வெட்டுப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிவராமனை, மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆட்கள் வந்தவுடன், தன்னைப் பிடித்து விடுவார்கள், என்று பயந்த அன்பழகன், நிர்மலாவின் வீட்டிலேயே, துாக்கு மாட்டிக் கொண்டு இறந்து போனார்.
English Summary
YOUNG BOY KILLED HER LOVER FAMILY