காதலிக்க மறுத்ததால் வீட்டிற்கே சென்று இளைஞர் செய்த கொடூர செயல்! அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர்கள்!!
young boy killed girl for not accepting his love
கேரள மாநிலம் திருச்சூர் அருகே சியாரம் பகுதியை சேர்ந்தவர் நீது. 25 வயது நிறைந்த அவரை அதே பகுதியை சேர்ந்த நித்திஷ் என்ற 24 வயது நிறைந்த இளைஞன் பல நாட்களாக காதலிக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளான்.
ஆனால் நீது அவரது காதலை ஏற்காமல் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று நீதுவின் வீட்டிற்கு சென்ற நித்தீஷ் அவரை தனியே அழைத்து காதலிக்கும்படி மறுபடியும் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவர் முடியாது என கூறிய நிலையில் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை நீது மீது பற்ற வைத்துள்ளார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் நீது அலறி
துடித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட நீதுவின் பெற்றோர்கள் மற்றும் அக்கம் `பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் அங்கிருந்தவர்கள் நிதிஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young boy killed girl for not accepting his love