சிறையில் டிமிக்கி கொடுத்து தப்பிய குற்றவாளி! அரியலூரில் பரபரப்பு!
சிறையில் டிமிக்கி கொடுத்து தப்பிய குற்றவாளி! அரியலூரில் பரபரப்பு!
அரியலூர் வட்டாச்சியர் அலுவலகம் அருகே பாலர் கிளை சிறைச்சாலை உள்ளது. இச்சிறைச்சாலையில் 18-21 வயதுடைய கைதிகள் அடைக்கப்படுவது வழக்கம். இந்த சிறைச்சாலையில் மொத்தம் 20 கைதிகள் வரை அடைக்க வசதி உள்ளது.
தற்போது இரண்டு கைதிகள் மட்டுமே இருந்ததாகவும் அதில் ஒரு கைதி நேற்று இரவு தப்பி சென்றதும் தெரிய வந்துள்ளது, எப்படி தப்பி சென்றார் என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
குற்றவாளி பெயர் மணிகண்டன் என்றும் கடந்த 18 ஆம் தேதி ஜெயங்கொண்டம் பகுதியில் இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர். அரியலூரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்நிலையில் குற்றவாளி தப்பியது அப்பகுதியில் பரபரப்பாக இருக்கிறது.
English Summary
young acquest escape from sub jail