கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு!! இளம்பெண் கொடூர கொலை!!
Women murdered in koyambedu market
நேற்று நள்ளிரவு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள கடைக்கு முன்பு பெண் ஒருவரின் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். மேலும் எந்தப் பகுதியை சேர்ந்தவர்? அவர் யார்? என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. அவருடைய கழுத்து மட்டும் கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. ஆனால் மற்ற இடங்களில் காயம் இல்லை.
இறந்து கிடந்த பெண் இரவு 10 மணி அளவில், ஆண் ஒருவருடன் அமர்ந்து அங்கு பிரியாணி சாப்பிட்டதை அந்த வழியே சென்ற தொழிலாளர்கள் சிலர் பார்த்து உள்ளனர்.
காதல் தகராறு காரணமாக பெண் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார், விசாரணையை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தி இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றியும் விசாரனை நடத்தி வருகிறார்கள்.
English Summary
Women murdered in koyambedu market