ரவுடி, குடிபோதையில் பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொல்லை!. பெண்ணின் கொடூர முடிவு!.
ரவுடி, குடிபோதையில் பெண்ணிற்கு தொடர்ந்து பாலியல் தொல்லை!. பெண்ணின் கொடூர முடிவு!.
வேலூர் மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி தண்டுமாரி என்ற பெண், ரவுடி தங்கராஜ் என்பவரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். மேலும் கொலை சம்பவம் குறித்து காவல்துறையில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலைசெய்யப்பட்ட ரவுடி தங்கராஜ் மீது கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் அதிகமான குற்ற வழக்குகள் உள்ளன.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்த தண்டு மாரியை சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தண்டுமாரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது, அவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், தங்கராஜ், என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டினார். மேலும், தங்கராஜ் ஆசைக்கு நான் இணங்க மறுத்ததால், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
சம்பவம் நடந்த அன்று இரவும், குடி போதையில் வீட்டுக்கு வந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். என்னை விட்டுவிடு என அவனிடம் எவ்வளவோ கெஞ்சியும், தங்கராஜ் எனது பேச்சை கேட்கவில்லை.
ஒரு கட்டத்தில் தங்கராஜ் என்னை அடித்து கொடுமைப்படுத்தி பாலியல் தொல்லையில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் பொறுத்துக் கொள்ள முடியாத நான் அவரது தலையில் கல்லைப் போட்டு கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
English Summary
women killed rowdy for sexual torture