பெண்ணைக் கடத்திச் சென்று போதை ஊசி போட்டு 5 நாள் சித்ரவதை செய்த கும்பல்..!!
பெண்ணைக் கடத்திச் சென்று போதை ஊசி போட்டு 5 நாள் சித்ரவதை செய்த கும்பல்..!!
நாகர்கோயில், வடிவீஸ்வரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 50) என்பவர், வக்கீல் குமாஸ்தாவாக உள்ளார். இவரது மனைவியின் பெயர் தங்கம் (வயது 42). இவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார்.
கடந்த மாதம் 12-ஆம் தேதி, இவர்கள் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டில் வைத்திருந்த 33 பவுன் நகை, ஒன்றரை லட்ச ரூபாய் ஆகியவற்றைத் திருடிச் சென்றனர்.
மேலும், இந்தப் பணத்தைக் கொள்ளை அடித்தவர்கள், ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றனர். அதில், “கதவைத் திறந்து வைத்ததற்கு நன்றி. எனது ஆவணங்களைக் கொடுக்கா விட்டால், உன் வீட்டில் உள்ளவர்களைக் கடத்துவேன்” என்று எழுதப் பட்டிருந்தது.
இது குறித்து, போலீசில் புகார் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதம் 29-ஆம் தேதி, தங்கம் வெளியே சென்ற போது, மர்ம நபர்கள் அவரைக் கடத்திக் கொண்டு சென்று விட்டனர்.
தங்கத்தை அவர் கணவர் ரமேஷ் மற்றும் போலீசார் தேடி வந்தனர். இரண்டு தினங்களுக்கு முன்பாக, ரமேசுக்கு ஒரு மர்ம நபர் ஃபோன் செய்து, “உன் மனைவியை, ஆரல்வாய் பஸ் நிலையத்தில் விட்டிருக்கிறோம். அவளுக்கு போதை ஊசி போட்டுள்ளோம்” என்று கூறி ஃபோனை வைத்து விட்டனர்.
அவர்கள், அந்தப் பேருந்து நிலையம் சென்ற போது, தங்கம் தலை மொட்டை அடிக்கப்பட்டு, சுய நினைவின்றிக் கிடந்தார். பின் அவருக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பிறகு, “தன்னை 5 பேர் கடத்திச் சென்று, ஒரு அறையில் பூட்டி வைத்ததாகவும், போதை ஊசியைப் போட்டு, அடித்து துன்புறுத்தியதாகவும் கூறினார்.
இது தொடர்பாக மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
women kidnapped and sexually abused