பாதிரியாரின் கன்னத்தி்ல் ஓங்கி அறைந்த பெண்!
பாதிரியாரின் கன்னத்தி்ல் ஓங்கி அறைந்த பெண்!
தமிழகத்தில் உள்ள பல பெரிய தேவாலயங்களுடன், பள்ளிகளும் இணைந்துள்ளன. இந்தப் பள்ளிகளுக்குத் தேவையான நிதி முதற் கொண்டு, அனைத்து வசதிகளும், வசதி படைத்த கிறிஸ்துவர்களாலே தான் நன்கொடையாக வழங்கப் படுகிறது.
அதனைக் கொண்டு தான், தேவாலயங்களின் திருப்பணிகள், பள்ளிக்குத் தேவையான உககரணங்கள் வாங்குதல் போன்றவைகளைச் செய்ய முடிகிறது.
தற்போது, கேரளாவில், பாதரியார்களின் மோசடி விவகாரங்கள், வெளிச்சத்துக்கு வரத் துவங்கி உள்ளன. ஏதோ, அங்கு மட்டும் தான், இந்த அநியாயம் நடக்கிறது, என்று எண்ண வேண்டாம்.
அதை விட இங்கு, நம் தென் தமிழகத்தில் உள்ள பல தேவாலயங்களில், தெய்வமாகப் போற்றப்பட வேண்டிய, பல பாதிரியார்கள், பயங்கர கேடிகளாகத் தான் இருக்கிறனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரத்தில், உள்ள தேவாலயத்தில், பாதிரியாக இருப்பவரின் பெயர் சற்குணம். இவர் இங்குள்ள மேற்கு சபையின் தலைவராக உள்ளார்.
இவரது மேற்பார்வையில், பாவூர் சத்திரம் கே.டி.சி. சர்ச் கோபுரம் கட்டுவதற்காக, 150 நபர்களிடம், 5000 ரூபாயிலிருந்து, 50,000 ரூபாய் வரை, வசூல் செய்துள்ளார். இதில், பலர் இந்த தொகையினை தவணை முறையிலும் கொடுத்துள்ளனர்.
ஆனால், சர்ச் கோபுரம் கட்டுவதற்கு, சிறிய அளவிலான தொகையை மட்டும் கொடுத்து விட்டு, மீதியை அப்படியே அமுக்கிக் கொண்டார். பணம் வசூல் செய்ததற்கான கணக்கும் வைக்கவில்லை.
மேலும், இங்குள்ள பள்ளியின் தாலாளரும் இவர் தான். அந்த வகையில், தன்னைச் சந்திக்க வரும் ஆசிரியைகளுக்கு, அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பாக, தன்னைச் சந்திக்க வந்த ஒரு இளம் ஆசிரியையிடம், “இந்த வருடம் நீ டீச்சர். அடுத்த வருடம், நீ தான் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை”, என்று சொல்லி விட்டு, அந்த இளம் பெண்ணின் மார்பில் கை வைத்திருக்கிறார்.
இதனைக் கண்டு வெகுண்டெழுந்த அந்தப் பெண், பாதிரியாரின் கன்னத்தி்ல் ஓங்கி அறைந்துள்ளார். பின், பாதரியார், அந்தப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால், அப்போதைக்கு அவரை மன்னி்த்த அந்த ஆசிரியை, தற்போது, பாதிரியார் மீது, போலீசில் புகார் கொடுக்க தயாராகி வருகிறார்.
விரைவில், அடுத்த பரபரப்பு செய்தி வரும், என்று அங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள்.
English Summary
woman slapped by a priest cheek