சார்ஜர் ஒயரால் பறிபோன கணவரின் உயிர் மனைவி செய்த கொடூரம் - Seithipunal
Seithipunal


சார்ஜர் ஒயரால் பறிபோன கணவரின் உயிர் மனைவி செய்த கொடூரம்

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர்கள் காளிதாஸ் ஜெயா தம்பதியினர். இவர்கள் இரண்டு பேரும் கப்பலூர் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் தம்பதியிருனக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜெயா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டு மாடியில் வசித்து வந்தார். இதற்கிடையே காளிதாஸ் வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி வந்துள்ளார்

அதனால் அவரை பார்ப்பதற்காக ஜெயா நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு அது கைகலகப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயா அங்கிருந்த செல்போன் சார்ஜரை எடுத்து அதன் ஒயரால் கணவரின் கழுத்தை இறுக்கியுள்ளா.

இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காளிதாசன் உடலை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக ஜெயாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரின் கழுத்தை செல்போன் சார்ஜர் ஒயரால் இறுக்கி மனைவி கொலை செய்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

woman arrested for kill husband in madurai tiruparangundram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->