தனியார் காற்றாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது..! 2 பேர் பரிதாபமாக பலி..!! திருநெல்வேலி அருகே பரிதாபம்..!!!
தனியார் காற்றாலை டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியது..! 2 பேர் பரிதாபமாக பலி..!! திருநெல்வேலி அருகே பரிதாபம்..!!!
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவு, காற்றாலைகள் உள்ளன. ஆலங்குளத்திலும், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அதிக அளவு, மின் காற்றாலைகள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த காற்றாலைகளில் இருந்து பெறப்படும், மின்சாரம், டிரான்ஸ்பார்மர்களில் வந்தடைகிறது. அப்போது அந்த உயர் மின் அழுத்தத்தை அளவீடு செய்வதற்காக, அந்த டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இந்த டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின்சாரத்தை நவீன முறையில், அளவீடு செய்வதற்காக, அவற்றில் மோடம் பொருத்துவதற்கு, தமிழக அரசு, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.
அதன் படி, அந்த தனியார் நிறுவனம், ஒவ்வொரு காற்றாலை டிரான்ஸ்பார்மர்களிலும், தங்களது ஆட்களைக் கொண்டு மோடத்தைப் பொருத்தி வருகின்றனர். கயத்தாறைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர்,(வயது 22) இந்த நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணி புரிந்து வருகிறார்.
இவர் புதிய இடங்களில் மோடம் பொருத்துவதற்காக, அந்தப் பகுதியை நன்கு அறிந்த கிங்ஸ்டன் (வயது 20) என்பவரை உடன் அழைத்துச் சென்றார். இவரும், தனியார் காற்றாலை நிறுவனத்தில் பணி புரிந்து வருபவர்.
அவர்கள் இருவரும் சென்று, ஒரு டிரான்ஸ்பார்மரை அணைத்து விட்டு, மோடம் பொருத்தும் பணியைச் செய்தனர். பின் டிரான்ஸ்பார்மரை, இயக்கும்படி முத்துப்பாண்டி, கிங்ஸ்டனிடம் சொன்னார்.
அதனால், கிங்ஸ்டன் டிரான்ஸ்பார்மரை ஆன் செய்தார். அடுத்த நொடி, யாரும் எதிர்பாராத வகையில், அந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியது. பெரும் தீயாக கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது அருகில் நின்றிருந்த கிங்ஸ்டன் மற்றும் முத்துப்பாண்டி இருவரும், அந்த தீயில் கருகி பலியாகினர்.
English Summary
WINTER MILL ACCIDENT TWO WORKERS DIED