தாழ்வு மனப்பான்மையில் தற்கொலை செய்து கொண்ட மனைவி!! காரணம் கேட்டு அதிர்ந்து போன கணவன்!! - Seithipunal
Seithipunal


கடலூர் பகுதியில் உள்ள பாதிரிக்குப்பத்தில் டி.ஆர் நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் என்பவரின் மனைவி சிவசங்கரி(34). இவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
 

நேற்றிரவு 11 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு மதிவாணன் வந்தார். அப்போது வீடு பூட்டிக்கிடந்தது. ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. பல தடவை கதவை தட்டியும் உள்ளேயிருந்து எவ்வித சத்தமும் இல்லை. 

இதனால் சந்தேகத்துடன், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உதவியுடன் கதவின் தாழ்ப்பாள் உடைத்து திறந்தனர். அப்போது அவரது  2 மகன்களை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சிவசங்கரி தனது கணவர் மதிவாணன், போலீஸ் அதிகாரி, தாய் சுமதி, தங்கை ஆகிய 4 பேருக்கு உருக்கமான கடிதங்களை எழுதி உள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் கூறிருந்தது:-

'நானும், எனது கணவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம். நான் எனது கணவருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விட்டேன்.

எனது கணவர் பொறுமையானவர். நல்லவர். ஆனால் நான் அவரை அழவைத்து விட்டேன். நான் எனது 2 மகன்களையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டேன். இதற்கு நானே தான் காரணம்.

எங்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது. அப்படியே எனது கணவரிடம் ஒப்படைக்க வேண்டும்' என்று மதிவாணனி மனைவி சிவசங்கரி கூறியுள்ளார்.

இதேபோல் மற்றவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்த கடிதங்களை சிவப்பு மையால் எழுதியுள்ளார். ஆனால் இந்த கடிதத்தில் மகன்களை கொன்று தற்கொலை செய்ததற்கான காரணங்களை சிவசங்கரி குறிப்பிடவில்லை.

2 மகன்களை சிவகங்கரி வி‌ஷம் கொடுத்து கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Wife suicide and her children also suicide


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->