சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்!. கணவனுக்கு தெரிந்ததால், மனைவி செய்த கொடூர செயல்!.
சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல்!. கணவனுக்கு தெரிந்ததால், மனைவி செய்த கொடூர செயல்!.
தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி நேதாஜி காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு கலைமணி(19) மனைவியும் 1 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் இருந்துள்ளது.
ஈஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் மனைவி கலைமணியுடன் அடிக்கடி சண்டை சண்டை போட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் கடந்த மாதம் 8-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவர் இறந்த அன்று கூட இப்படி குடித்து குடித்தே இறந்து விட்டாயே என கதறி அழுதுள்ளார் மனைவி கலைமணி. இதனையடுத்து திடீரென ஒருநாள், தன் குழந்தையை எடுத்து கொண்டு ஈஸ்வரனின் தந்தையிடம் ஒப்படைத்தார். அதோடு வீட்டில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 3 சவரன் நகை அனைத்தையும் எடுத்துகொண்டு வெளியே சென்றுவிட்டார்.
திடீரென மருமகள் மாயமானதால் மாமனாருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், ஒருநாள் இளைஞருடன் கலைமணி ஜாலியாக ஊர் சுற்றி கொண்டிருப்பதை நேரடியாக பார்த்த ஈஸ்வரனின் தந்தை அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்ததால் தாசில்தார் முன்னிலையில் ஈஸ்வரன் உடல் தோண்டப்பட்டு பிரேத பரிசோதனையும் நடத்தப்பட்டது. அப்போது அவர் உடலில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவ அறிக்கை வந்தது.
இதனையடுத்து கலைமணியிடம் போலீசார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் கூறுகையில்,எனக்கும் அழகர்சாமிக்கு கள்ள உறவு இருந்தது. இதை என் கணவர் ஈஸ்வரன் கண்டுப்பிடித்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து கணவர் ஈஸ்வரனுக்கு கொடுத்த சாப்பாட்டில் விஷத்தை கலந்து கொடுத்தேன். அதை சாப்பிட்ட அவர் இறந்துவிட்டார் என்றார். இதனையடுத்து கலைமணி, அழகர்சாமி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
wife killed her husband for her illegal affairs