கள்ளகாதலின் வெறியாட்டம்!. குடும்பத்திற்காக வெளிநாட்டிற்கு சென்ற கணவன், மனைவி செய்த அட்டூழியம்!. - Seithipunal
Seithipunal



விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஜாகீர் உசேன் - சபீனா பானு தம்பதியினருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பணம் சம்பாதிப்பதற்காக ஜாகீர் உசேன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்தநிலையில் சபீனா பானுவுக்கும், பக்கத்துவீட்டை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரிடையே கள்ளக்காதல் உருவானது.

இந்த விஷயம் சபீனா பானுவின் வீட்டின் அருகில் வசிப்பவர்களுக்கு தெரியவந்து, இதனையடுத்து வெளிநாட்டில் இருக்கும் சபீனாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனால், தனக்கு துரோகம் செய்த மனைவியின் ரகசியத்தை கண்டுபிடிப்பதற்காக 6 மாதத்திற்கு முன்னால் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்துள்ளார் ஜாகீர் உசேன்.

இவர் வந்த நாட்களில் இருந்து கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது கணவனின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார் மனைவி சபீனா பானு.

உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தநிலையில் ஜாகீர் உசேன் வீட்டுக்குள் அலறித் துடித்தார். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சபீனா பானு, அவரது கள்ளக்காதலன் யுவராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wife killed her husband for her illegal affairs


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->