போதையில் வந்த கணவனை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி!
போதையில் வந்த கணவனை உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி!
குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி உலக்கையால் அடித்து கொலை செய்த மனைவி கைது!
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே தெற்கு பூலான்குளம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன். இவர் தினமும் மது குடித்து வந்து மனைவியை அடித்து துன்புறுத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல் குடித்து விட்டு மனைவி லட்சுமியிடம், லட்சுமணன் விடிய விடிய சண்டையிட்டு அவரை சரமாரியாக அடித்துள்ளார்.
நேற்றுக்காலை 4மணி வரை நீண்ட சண்டையால், பொறுத்தது போதும் என, கோவம் தாங்காமல் உலக்கையை கொண்டு தன கணவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவனை கொன்று விட்டு கதறி அழுத்த மனைவியை பார்த்த ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் லட்சுமியை கைது செய்து. அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
wife KILLED drunken husband