பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த விதவை பெண்! கொலையாளி அளித்த பகீர் வாக்குமூலத்தால் அதிர்ச்சி.!
widow girl murdered by illegal affairs
திருமுல்லைவாயல் நாகம்மை நகரில் வசித்து வந்தவர் திலகா இவருடைய கணவர் தீபன், இவர்களுக்கு பிரின்சி என்ற 12 வயது மகள் உள்ளார். இந்நிலையில் திலகாவின் கணவர் தீபக் 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
திலகா, வில்லிவாக்கத்தில் சத்துணவு கூடத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பொங்கல் விடுமுறைக்காக மகள் பிரின்சி தனது பாட்டி வீட்டுக்கு சென்று விட்டதால் திலகா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று 10 மணி வரை திலகா வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
வீட்டின் உள்ளே தரையில் திலகா, மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசாரிடம் தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், திலகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டநிலையில் திலகாவின் உறவினரான குமார் என்பவர் நேற்று மதியம் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்த விசாரணையில், கணவர் உயிருடன் இருக்கும்போதே குமாருக்கு திலகாவுடன் 4 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த குமாரிடம் இனி குடும்ப செலவுக்கு நீதான் பணம் தரவேண்டும். இல்லாவிட்டால் உன் வீட்டுக்கே வந்துவிடுவேன் என திலகா கூறியாததால், குமார் திலகாவுக்கு 2 தூக்க மாத்திரைகள் கொடுத்து, அவர் மயங்கியதும் ரிப்பனால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
widow girl murdered by illegal affairs