வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்! மொத்த குடும்பமே அரங்கேற்றிய பக்கா நாடகம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மணி. இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு மோகனவேல், மகேஷ், ரமேஷ் என 3 மகன்கள் உள்ளனர். மேலும் இவர்கள் திருமணம் ஆகாமல் தனது தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

மேலும் இவர்களில் மோகனவேல் மற்றும் ரமேஷ் இருவரும் உள்ளூரில் வேலை செய்து வருகின்றனர்.ஆனால் இரண்டாவது மகன் மகேஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தான்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மகேஷ் சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்துள்ளார். அதனை தொடர்ந்து அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் மகேஷ் மது குடித்து விட்டு குடிபோதையில் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களுடன் வாக்குவாதம் செய்தபோது தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த தந்தை மணி தனது மகன்கள் மோகனவேல், ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்து மகேஷை பலமாக அடித்து தாக்கியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே மகேஷின்  உடலை தூக்கி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் தொங்கவிட்டுள்ளனர்.பின்னர் மகேஷ் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டதாக அலுத்து புலம்பி அக்கம் பக்கத்தினரிடம்  நாடகமாடி உள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிசார் மகேஷின் உடலைபரிசோதனை செய்து பார்த்தபோது அவரது தலையில் ரத்த காயம் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது மகேஷை அடித்து கொன்றது தெரியவந்தது.

இதனையடுத்து கொலை செய்த மூவரையும், கொலையை மறைக்க உதவியாக இருந்த  தாய் தமிழ்செல்வி ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

whole family attack and killed youngman


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->