தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.!! சென்னை மக்களே உஷார்..!!! - Seithipunal
Seithipunal


{நாள்:20.07.2018} தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், 5 மாவட்டங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் கொட்டித் தீர்த்து வருகிறது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளான கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெளுத்து வருகிறது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் பல இடங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோடை மழை ஏமாற்றிய சென்னையில் கடந்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தேனி, திண்டுக்கள், நெல்லை. கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weather report tn and pondy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->