எச்சரித்தது போலவே அரங்கேறியது.! தமிழகமே வெந்து நொந்துபோன கொடுமை.!!!
weather report march 7
கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான வெயில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மழை, பணி என்று தமிழகம் குளுமையாக இருந்த நிலையில், கடந்த சில தினங்களாக வெயில் வட்டி வதக்கி வருகிறது.
கோடை வெயில் ஆரம்பிக்க இன்னும் ஒரு மாதங்கள் உள்ள நிலையில், தற்போது 40 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக தமிழகத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறிப்பாக, வேலூர், மதுரை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில், சென்னை வானிலை மையம் 13 மாவட்டங்களுக்கு அனல்காற்று வீசும் என்று நேற்று எச்சரிக்கை விடுத்தது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கடும் வெப்பம் நிலவும் என்றும், இதனால் அனல் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, மதுரை, சேலம், திருச்சி, வேலூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அனல் காற்று அதிகம் வீசும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்க்கும் அதிகமாக வெயில் பதிவாகியது. குறிப்பாக கரூர், மதுரை மாவட்டங்களில் 105.8F வெயில் தாக்கியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதே போல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.