தமிழகத்தில் திடீர் பரபரப்பு.. ஒரே இரவில் 3 முறை நிலநடுக்கம்.. அதிர்வின் பின்னணியில் அதிரவைக்கும் தகவல்..!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி, அத்திமாகுலப்பள்ளி கிராமத்தில் நேற்று இரவு 7.45 மணிக்கு திடீரென நில அதிர்வு 3 முறை ஏற்பட்டது. 

முதல் முறை லேசான அதிர்வு உணரப்பட்டது, அதனை தொடர்ந்து இரண்டாவது முறை அதிக அதிர்வு ஏற்பட்டது. 

இதுதான் மிகுந்த அளவில் பாதிப்பை ஏற்ப்படுத்தியது. இதன்போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே விழுந்தன.

மீண்டும் 3 ஆவது முறையாக லேசான நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டபோது பயங்கர வெடி சப்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

வீடுகளில் உள்ள பொருட்கள் குலுங்கி கிழே விழும் அளவிற்கு அங்கே என்ன நிகழ்ந்திருக்கும் என்று மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெடி சப்தம் கேட்டதாக கூறப்படுவதால், சுற்றுவட்டாரத்தில் எதையாவது தகர்க்க வெடி வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

நில அதிர்வு காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்து தெருக்களில் நின்றனர்.

மீண்டும் நில அதிர்வு ஏற்படலாம் என்ற அச்சத்தில் இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்லாமல் நீண்ட நேரம் தெருக்களிலேயே இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fault lines beneath the Tirumala hills -and places in Tamil Nadu such as Palar and Tarangambadi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->