200 ரூபாய் கொடுத்ததால் இப்படியா? ரத்தவெள்ளத்தில், துடிதுடிக்க வாலிபர் அரங்கேற்றிய கொடூரம்.!
vinoth beat oldman for 200 money
சென்னை தாம்பரத்தை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் வேலாயுதம். 62 வயது நிறைந்த இவர் நன்மங்கலத்தில் உள்ள ஒயின் ஷாப் பாரில் வேலை செய்து வந்துள்ளார். மேலும் அதே பாரில் வினோத் என்ற 23 வயது வாலிபனும் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார்.
வினோத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூபாய் வேலாயுதம் 200 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாருக்கு வெளியே நின்று கொண்டிருந்த வேலாயுதத்துடன் வினோத் வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது பணம் இல்லை என கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது.
இதில் கடும் கோபத்திற்கு ஆளான வினோத் அங்கிருந்த உருட்டுக்கட்டை ஒன்றை எடுத்து வேலாயுதம் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார் இதில் படுகாயமடைந்த வேலாயுதம், விபத்தில் அடிபட்டதாகக் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாரில் உள்ள சிசிடிவி கேமராவின் மூலம் நடந்ததை கண்டறிந்தனர்.
இதற்கிடையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வேலாயுதம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் இதனைத்தொடர்ந்து வினோத் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
vinoth beat oldman for 200 money