விலகி ஓடாதீங்க, நமக்கு தேர்தல் இருக்கு.! ஒட்டு போடும் வாக்காளர்களுக்கு அட்டகாசமான அறிவுரை கூறிய மக்கள் செல்வன்.!
vijaysethupathi advice to voting people
தமிழ் சினிமாவில் சிறு,சிறு கதாபாத்திரங்களில் நடித்து தனது விடாமுயற்சியாலும், கடின உழைப்பாலும் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதாபாத்திரங்களில் மிகவும் இயல்பாக, நேர்த்தியாகவும் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
மேலும் அவரை ரசிகர்கள் மக்கள் செல்வம் என அன்போடு அழைத்து வருகின்றனர். இந்நிலையில் விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.அப்பொழுது நான் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தின் முக்கியத்துவம் கருதியே அந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். நான் அவ்வாறு நடித்தபோது பெண்களின் மீதுள்ள மதிப்பு இன்னும் அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை 10 வினாடிகள் கூட கேட்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும்.
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அரசியலை விட்டு விலகக்கூடாது. அரசியல் சாக்கடை என்று தவறாக சொல்லி விட்டார்கள். அனால் அவ்வாறு கிடையாது
. இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதோடு மட்டும் நின்றுவிட கூடாது. நமக்கு சரியானவர்கள் இல்லை என யாரை பிடிக்கவில்லை என்றாலும், அதை தேர்தல் மூலம் தெரிவிக்க வேண்டும். அனைவரும் ஓட்டு போட்டு நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதிலிருந்து விலகக் கூடாது என கூறியுள்ளார்.
English Summary
vijaysethupathi advice to voting people