நான் செய்ய வேண்டியதை ஓபிஎஸ் செய்தார்!! காங்கிரசை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பேட்டி!! - Seithipunal
Seithipunal


பாஜகவில் இருந்து தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் நடிகையும், அரசியல் வாதியுமான நடிகை விஜயசாந்தி, முன்னணி நடிகர்களான ரஜினி கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். 

தற்பொழுது முழு அரசியல்வாதியாக மாறியுள்ள இவர், ஜெயலலிதா இறப்பிற்கு முன்பு அடிக்கடி ஜெயலலிதாவை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

செய்தியாளர்களிடம் அவர்," ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்த போது, நம்பிக்கையான ஆதரவாளர் வேண்டும் என என்னை அதிமுகவில் இணைய அழைத்தார். 

எனது படங்கள் குறித்து நிறைய பாராட்டியுள்ளார். நான் இறுதியாக அவரை சந்தித்த போது, அவரது இரண்டு கால் கட்டை விரல்களும் நகம் நீக்கப்பட்டு, கட்டுப்போட்டு இருந்தது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு என மூச்சு விடவே மிகவும் சிரமப்பட்டார். 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்காகவே நான் தமிழகத்தில் பிரச்சாரம் செய்தேன். அவர் அதிமுகவில் இணைய அழைத்த பொழுது நான் தெலுங்கானாவிற்காக போராடி கொண்டிருந்தேன். தமிழக அரசியலில் ஈடுபட நான் தயாராக இல்லை.

எனவே, நான் இருக்க வேண்டிய இடத்தில் ஓபிஎஸ் இருந்தார். சசிகலாவுடனும் எனக்கு நட்புண்டு. ஆனால், அது அரசியலுக்கு அப்பாற்பட்டது" என கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayasanthi says about jeyalalitha


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->