வாக்குப்பதிவு இயந்திரத்தில் திடீர் கோளாறு: வேலூரில் பதற்றம்.!
Vellore voting machine malfunction
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் காலையிலிருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், வேலுர் காட்பாடி தொகுதி காந்திநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் திடீரென வாக்கு பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் பரபரப்பில் உள்ளனர். மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Vellore voting machine malfunction