சொட்டு மருந்து..! வெறும் 20 ருபாய்..! 48 மணிநேரம் போதை..!! வேலூர் மாவட்டத்தில் கொடிகட்டி பறக்கும் போதை வஸ்த்து..!!!
சொட்டு மருந்து..! வெறும் 20 ருபாய்..! 48 மணிநேரம் போதை..!! வேலூர் மாவட்டத்தில் கொடிகட்டி பறக்கும் போதை வஸ்த்து..!!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள உமாராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாராயத்திற்கு பதிலாக புது விதமான ஒரு சாராயம் விற்பனை கொடிக்கட்டி விற்பனையாகி வருகிறது'
அந்த சாராயத்திற்கு பெயர் ''சொட்டு மருந்து சாராயம்'' எனவும், இதனை அந்த பகுதிகளில் தயாரித்து 100 ml பாக்கெட்களில் விற்பனை செய்து வருவதாகவியம் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தயாரிக்க சுமார் 100 ml தண்ணீரில் கண்ணுக்கு விடும் சொட்டு மருந்தை கலந்து நன்கு காய்ச்சுவார்களாம். பின் அது நன்கு பொங்கி அடங்கிய பின். அதில் கட்டுப்புகையில் சேர்த்து மண்ணில் புதைத்து வைத்துவிடுவார்களாம்.
பின், சில நாட்கள் கழித்து வெளியில் எடுத்த உடன் அதில் ஒரு சில போதை வஸ்த்துக்களை கலந்து அந்த கலவையை வெண்மை நிறமாக மாற்ற ஒரு ரசாயனத்தை கலந்து விட்டு 100 ml பாக்களில் அடைத்து ருபாய் 20-க்கு ஒரு பாக்கெட் என்ற முறையில் விற்பனை செய்து வருகின்றார்களாம்.
மேலும் மொத்த வியாபாரத்திற்கு 35 லிட்டர் கேன்கள் ருபாய் 1500 க்கு இந்த சொட்டு மருந்து சாராயத்தை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் நடக்கும் திருமணம் முதல் கருமாதி வரை அணைத்து விழாக்களிலும் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறதாம்.
இதனை தயாரிக்கும் செலவு குறைவு, லாபம் அதிகம் என்பதால், அந்த பகுதி மக்கள் இந்த தொழிலை தங்களது வீடுகளில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த தகவல் காவல் துறையினருக்கு தெரிந்தாலும் இன்னும் நடவடிக்கையும் எடுத்த பாடு இல்லை. என சமூக ஆர்வலர்கள் புலம்பி தள்ளுகின்றனர்.
English Summary
vellore people find in new drugs